Posts

Showing posts from March, 2009

எப்படி முடியும் என்னால்..???

Image
எப்படி முடியும் என்னால்.....   ஒரு முறை உன்னுடன் பேச வேண்டும் வா என்றாய் துள்ளி குதித்து ஓடி வந்தேன்  உன்னிடம் இருந்த மனக்கவலையை கொட்டினாய்  என்னிடம் ஏந்தி நின்றேன்  ஆற்றுமணலில் ஒய்யாரமாய் கை பிடித்து நடக்கிறாய் ஆர்ப்பாட்டமில்லாமல் நடக்கிறேன் நான் உன்னுடன்  இரகசியம் என்ற பெயரில் காதருகே கிசுகிசுக்கிறாய்  ஒசைஇல்லாமல் எத்தனையோமுறை என் முகம் பார்த்து பேச மறுத்து இருகிறாய் என் பெயரை உச்சரிக்கும் பொழுதெல்லாம் உள்ளுக்குள் எதோ உணர்வதாய் சொல்கிறாய் திடிரென என் தோள் சாய்ந்து காரணமில்லாமல் அழுகிறாய் கேட்டால் உன் தோள் சாய்ந்து அழுவது பிடிக்கும் என்கிறாய்..!   தாமதமான என் நிமிடங்களை நின்றுகொண்டே ரசித்து இருகிறாய் கேட்டால் உனக்காக இதுவும் செய்வேன் என்கிறாய்  நான் ரசித்த விஷயங்கள் எல்லாம் பிடிக்கும் என்கிறாய் கேட்டால் உன் தீர்வு சரியாக இருக்கும் என்கிறாய் மனதிற்குள் குழப்பத்தை விளைவிக்கும் செயல்கள் எல்லாம் செய்கிறாய் கேட்டால் சிரித்துகொண்டே சென்றுவிடுகிறாய் இப்படியாக நீ இருந்தால் எப்படி முடியும் என்னால் உன்னை காதலிக்காமல் ......???  ...

யாரடா நீ...?

Image
எங்கே சென்றுவிட்டாய் என்னவனே... யாரடா நீ...? என்னை தவிக்கவிட்டு சென்றவன் முரண்பாடு காண்கின்றேன் என்  நினைவுகளில்   இப்படி ஒரு தவிப்பை கண்டதில்லை நான் என் வாழ் நாளில்  கண் திறந்து விழி நோக  காண்கின்றேன் விரல் தீண்டாத என் பாகங்கள் விழித்துக்கொண்டு  விடை கொடுக்க மறுக்கின்றன  தண்ணீர் கொண்டு தேகச்சூடு தணிக்க திண்டாடிப்போகிறேன் யாரடா நீ...?   என் மேல் இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவன் ..? இப்பொழுதெல்லாம் நான் உடுத்தும்  உடை கூட எனக்கு பிடிப்பதில்லை நான் உன்னை உடுத்திய பிறகு தாங்காத தேகம் கொண்டு தன்னிறைவாய் நிற்கிறாயே  நிர்கதியாய் இங்கு நான்  மூடாமல் போட்டுவிட்ட முழு நிலவாய் நான் இங்கிருக்க சூரியனாய் சுட்டெரிக்கிறது உன் நினைவுகள்  யாரடா நீ ..?  என் உற்சாகத்தை வேரறுத்தவன்... மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டேன் உன்னை நான் செய்த தவறு என்ன..? தவிக்கவிட்டயே என்னை தாய் தந்தை மறந்தேன் உன்னை மட்டுமே  நினைப்பதற்க்காக மறந்த கனம் கண்டதில்லை நான் என்னிடம் - உன்னை பிரிந்தபோது முழுவதுமாய் அர் ப்பணித்தேன் என்னை உன்னிடம் அடைக்கலம் புகுவேன் உன்னிடமின்றி யாரிடம்.. ? யாரடா நீ...?  உண்ணும் உணவு கூட உ...

கலையாத நட்பு ........

Image
என் அன்பு தோழிக்கு .... ஆயிரம் சுமைகள் என்னுள்  கலங்கிய கண்களுடன் நான் -இன்று. வாடாத முகம் கொண்ட வசியக்காரியே -  நீ வசை பாடாத  வார்த்தைகளே இல்லை என்னிடம் பேசாத நாள் கண்டதில்லை நான் உன்னிடம்  உன்னை மறந்த நோடிபோழுதை அறிந்ததில்லை நான் என்னிடம் ஆயிரம் ஆயிரம் வார்த்தைகள் என்னிடம் எனக்காக நீ சிந்திய சில மணி துளிகளில் நான் சேகரித்தது சிந்தாமல் சிதறாமல்  எத்தனையோ முறை என்னை ஏற்றிவிட்டிறிக்கிறாய் ஏணிபடியாய் ஒவ்வொரு கால்தடமும் தன்னம்பிக்கையின் தடயங்களாய் .... பட்டமரமாய் நின்றிருந்தேன் நான் தோற்றுபோனபோழுதெல்லாம் தோள் கொடுப்பாயே நான்  துவண்டு விடாமல் இருப்பதற்க்காக உன் இரும்பு இதயம் கண்டு இறுமாப்பு கொண்டிருக்கிறேன் நான் பலமுறை  கரும்பாய்  இனிக்குதடி உன் நட்பு மாற்றம் ஒன்றே மாறாததாம் இவ்வுலகில் - நம் நட்பை தவிர  எத்தனை மனிதர்கள் நம் வாழ்க்கை பாதையில் நீ மட்டும் சிறப்பாய் ஏன் என் மனதிற்குள் சத்தியமாக மறைந்திருப்பேன் இம்மண்ணைவிட்டு - நம்மிடம்  நட்பு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இன்னமும் தேடிகொண்டிருக்கிறேன் நான் நம்மிடம் நட்பு ஏற்படுத்திய நிமிடத்தை  காலங்கடந்த காலச்சுவடிகள் போல் கண்ணியமா...

பேசாத காதல்........

Image
மௌன மொழி...  ஆயிரம் ஆசைகள் உதிக்கின்றன - மனதிற்குள் உன்னிடம் பேசுவதற்காக .. முழு நிலவின் வெளிச்சத்தில் பயிற்சி செய்து பார்க்கிறேன் பலமுறை தவறு கூடாது என்பதற்காக .. குழந்தை மொழி பேசுகிறாய் என்னிடம்  முழுமையாக தந்துவிட்டேன் என்னை உன்னிடம்.. கடலின் அழம் கூட அறிய முடிகிறது - உன் மனதை தவிர  தோற்றுவிட்டது விஞ்ஞானம் உன்னிடம்.. தவறாமல் பார்த்துவிடுகிறேன் சூரிய உதயத்தை தூக்கம் கலைந்த உன் கண்களை காண வேண்டும் என்பதற்காக.. பூக்காரியும் பழக்கமாகி விட்டால் - தினசரி உன்னை காண பேருந்து நிலையம் வருவதால்.. எத்தனையோ முறை உன் பெயரை சொல்லிஇருகிறேன் மனதிற்குள் முடியவில்லை என்னால் உன் முன் உச்சரிப்பதற்கு.. உன் அழகிய சிரிப்பில் மயங்கி கவிதை படைத்திருக்கிறேன் பலமுறை ஒருமுறை கூட படித்தது இல்லை உன்னிடம்.. உன் நிழலின் மீது குடை பிடித்திருக்கிறேன் உன் முகம் மீது வெளிச்சம் படாமல் இருப்பதற்காக ஒருமுறை கூட சொன்னதில்லை உன்னிடம்.. கனவிலும் கூட மௌனம் காத்திருக்கிறேன் உனக்காக  எங்கே என்னிடம் பேசாதே என்பாயோ என்பதற்காக ... நீ உதிர்க்கும் அத்தனை புன்னைகைகும் சொந்தக்காரன் நான் பலமுறை படித்திரிக்கிறேன் உன் புன்னகையை ...

அன்பு காதலிக்கு ...........

Image
சமைந்த பெண்ணானேன் உன் முகம் - பார்த்து ... ! பூமிகென சிறப்பாய் மானிட பிறவி எக்கிரகதிற்கும் கிடைக்காத வரம் - நீ எனக்கு கிடைத்தது போல் நான் அம்மா என்றுஉரைக்க என் தாய் பட்ட வலி நான் உன்னை என் மனதால் சுமந்த போது ......! பேசாமல் மௌன மொழி காத்தாய் உணர்ந்தேன் ஆயிரம் அர்த்தங்களை முன்னிருந்து நான் நடக்க உன் விழி பார்த்ததும் பின்னி பிணைகின்றன என் கால்கள் போதைஇன் மொத்த உருவத்தையும் உன் கண்ணில் சுமக்கிறாயே வலி தாங்காமல் என் மேல் இறக்க கிறங்கிபோனேன் நான் உன் பார்வையில்... போர்வைக்குள் ஓடி ஒளிகிறேன் உன் பார்வையை எதிர்கொள்ள பயந்து .... மேகமாய் மாறிப்போன உன் பார்வைகள் என் மூச்சு காற்று பட்டதும் காமமாய் பொழிந்தனவே ..... ஊடகமாய் மாறி விட்ட உன் உடம்பில் ஊற்றெடுக்கும் நீருக்குள் நனைந்துவிட தத்தளிக்கிறது என் தேகம் மீளமுடியாமல் ....... கொக்கரிக்கறது என் தேகங்கள் மீண்டும் உன் உடல் தேடி ....... உள்ளதை மட்டும் கொடுக்காமல் உடலையும் கொடுத்தவளே இவ்விரண்டும் என் உயிர் சுமக்கிறது உன்னுள் ... அம்மா என்று உரைக்கும் நாள் காண கனவுடன் நீ - கண்ணியத்துடன் நான்.....! பிரகாஷ்.சு