Posts

Showing posts from August, 2023

ஏக்கம் கொண்டு...

Image
  விமர்சனம்... ஏக்கம் கொண்ட என் எண்ணங்களுக்கு மட்டும் இல்லாமல்  தன்னிச்சையான மனதின்   உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுகிறது... தண்ணீருக்கும் தடுமாறும் குணம் உண்டு என் கண்ணீருக்கும் வேண்டும் அந்த விதி..! இரண்டுமே ஒரே ஜாதி என்பதால்   விதை இட்டால் முளைத்துக்கொள்ளும் என தெரிந்தால்  புதைத்து விடுவேன் என் நினைவுகளை..  காதலை  நீராக்கி வளர்த்துவிடுவேன் என் வாழ்வுதனை.. காய்க்கும் நேரமெல்லாம் கல்லடி படுகிறேன்... ஏன் எனக்கு உரிமையில்லையா...? நமதான உரிமையில் உரம் இட்டேன்னே...! பலன் மட்டும் கூடாதாம் - இது என்ன கூத்து ? என்  அன்பை கொண்ட இடமெல்லாம், எனக்கு  சொந்தம் இல்லை  மனம் கொண்ட மரக்கொத்தி பறவையாய் - என் மரம் தேடி அலைகிறேன்  உன் காலடி பட்ட  இடமெல்லாம் இருளாகத்தான் இருக்கிறது  ஜன்னல் இல்லாத  அறைக்குள் நீ -  எனக்குள் வெளிச்சம் தேடி ஏற்றி  வைத்த விளக்காய் நான்  உன்னை கண்ட நேரம் கண்களுக்குள் காந்த சக்தியாய்  உள்ளார்ந்து போனால் - கண்ணில் விழுந்த மண் துகளாய்  கண்ணீரில் கரைந்து போகிறேன்  மண்ணில் ...

இதழில் கதை எழுதும் நேரம் ...

Image
  ஆணவக்காரி அவள்... என் காதலி  அவளின் முதல் முத்தம்  கன்னத்தில் இட்டால்... நான் கலங்கிவிடுவேன் என்ற அச்சத்தில்    என் நெஞ்சத்தில்... இதழ் பட்ட இடத்தில் மட்டும் இருதயம்  சற்று  நின்று போனது...      உன்  அங்கத்தின் அடக்குமுறைக்கு அடங்கிபோகி  மஞ்சத்தின் மையத்தில் தலை சாய்த்து, சஞ்சரிக்கும் உன் அழகை கண்டு  தண்ணீருக்குள் பூத்த தாமரையாக நம்  காதலை ஆலாபனை  செய்துவிட்டேன்...   சத்தமில்லாமல் நீ  செய்யும் இம்சைகெல்லாம் வெட்கமில்லாமல் வியந்து போனால், என்  பக்கம் வந்து பாய் விரிக்கிறாய்...  பெற்றெடுத்த பிள்ளை போல வாரிக்கொண்டு மழைக்கு பிடித்த குடையாய் மாறிப்போகிறாய்... 

முதுமையிலும் காதல்...

Image
  வயது,  நம் காலத்தை மட்டுமே தீர்மானிக்கும்... நம் காதலை அல்ல...!  இளமையில் மட்டுமல்ல....  உன் தலை நரைத்த நாட்களிலும் நம் காதல் ஒரு  குழந்தைதான்    பிரியாத வரம் கேட்டு காதலால்  கோர்த்த கைகள்...  என் கண்ணில் கண்ட கனவெல்லாம் கைப்பற்ற நினைத்து கணவனாகி போனேன்... இரவில் முளைத்த நம் முதல் உறவு...   முத்தத்தின் முனகளில்  தொடங்கியது...  கனத்த உடலை தாங்கி கசங்கிய உன் ஆடைகளில் ,   ஆசையுடன் அலங்கரித்த நம்  காமமும், காதலும்...  வாழ்கையின் அடையாளமாய்... நம் வாழ்வின் அணிகலன் விரத பூஜை கண்டதில்லை நான்... உன் கட்டில் பூஜையை கண்ட பிறகு...! காதலிக்க மறுத்த தருணங்களில்...தவழ்ந்து போகும் உன் நினைவுகள்...

பெண்மை... !!! ஓர் மணலின் ஏக்கம்

Image
  கடலும்... பெண்மையும்... அலையும்... மணலும் ரகசிய திருமணம் செய்தது  என்னவோ உண்மைதான்... உன் அலைகளால் என் பெண்மையை அனுபவிக்கிறாய்... எத்தனை முறை உரசி செல்கிறாய்  ஒவ்வொரு முறையும்  பெண்மையின் மென்மையை... மெய்ப்பிக்கிறாய்  புகுந்த வீடான  பூமிக்குள், பூத்திருக்கும்  பூமாலையாய் நானிருக்க... என் மனதில் ஆர்ப்பரித்து ஆருடம் பார்த்து செல்கிறாய்...