தள்ளி இருக்கும் தருணம்...

 




உன்னுடன் பழகிய கணத்தில் இருந்து தள்ளிவந்தால் என்னதான் ஆகும்?

மூச்சு மட்டும் சற்று விட்டு எடுக்கும் இதயத்தின் துடிப்பில் வேகம் இருக்கும்...

பேசிய பேச்சுக்கள் எல்லாம் ஊமையாகி, அழகிய நினைவுகளுடன் கை கோர்க்கும் 

செய்யவே கூடாது என்பதெல்லாம் பொய்த்தே போகும்...

நமக்கு பிடித்த இசை என் தனிமையை வசமாக்கி ஏங்கி தவிக்கும்...

தொலைபேசியில் திளைத்துக் கொண்டே தடமரியா தூரம் சென்று உன் போல் பாவித்து கை பேசியை காதலித்திருக்கும்...

அழகில்லை என்றாலும் ஆடை மாற்ற மறந்திருந்து முக்தியானது போல் முனகிக் கொண்டே மூன்றாம் பிறை கண்டிருக்கும்...

கண்களின் காந்த சக்தி காணமல் போய், வன்மம் அற்ற வார்த்தைகளை வந்தனம் செய்திருக்கும்...

அமைதியான அன்புள்ளம் அள்ளிக் கொள்ள ஆள் இன்றி ஆறுதல் தேடி ஆர்ப்பரிக்கும்...

மொத்ததில் வாழ்க்கை ஒரு வேதனை ஆகி முற்றும் துறந்த முட்டாலாய் மூச்சயர்ந்து போகிருக்கும்....

வேதனைகள் வேண்டாமென உரிமையுடன் உறவாடி, தள்ளி நிற்க மறுத்து நின்று ஜல்லிக்கட்டில் அடங்கி போயிருக்கும்...

உன்னிலிருந்து தள்ளி வைத்து தவித்து போக திறனின்றி இந்த எண்ணத்தை ஏளனம் செய்திருக்கும்...

இந்த மானம் கெட்ட மனசை மயானத்தில் மரித்திருக்கும்...

Comments

Popular posts from this blog

விலைமாது..........???

பெண்மை... !!! ஓர் மணலின் ஏக்கம்

அன்பு காதலிக்கு ...........